-

பார்க்கலாம் நின்றபடி பார்க்கலாம்உட் கார்ந்தபடி பார்க்கலாம்ஷோ பாவில் படுத்தபடி -பாக்கலாந்தான் இம்மாம் பெரிய உலகத்தைக் கண்முன்னே தம்மாத்துண் டேகணினி யில்!

புதன், 24 ஜூன், 2009

!

ஆற்றோரம் நாணல் அடியில் அமர்ந்தொருவன்
நேற்றுண்ட தைப்போக்கி நீங்கிச்சென் -றூற்றூறும்
நீரினிலே காலலம்பி நீங்கினான் நேரிழையும்
நீரிறைத்து நீங்கினால் நின்று.

அகரம் அமுதா

வியாழன், 18 ஜூன், 2009

புகை!

நகரம் முதல நரகம் உறிஞ்சும்
புகையின் முதலேவாய்ப் புற்று.

புற்றதனால் வீழும் புகழுடல் பற்றறுத்து
முற்றா எழாஅர் எனில்.

புற்றதால் வாயில் புழுநெலியும் பற்றதனால்
வைக்காதே பாழ்சுருளின் மேல்.

அகரம் அமுதா