எங்காத்தா ஆனாலும் யாராத்தா ஆனாலும்
ஒங்காத்தா ஆனாலும் ஒப்பில்லா -மங்காத்தா
தாரதுபோல் காசைத் தருவாரா? ஏமாந்தா
வாரதுபோல் போகவைப்பா ரா?
அகரம்.அமுதா
-
பார்க்கலாம் நின்றபடி பார்க்கலாம்உட் கார்ந்தபடி
பார்க்கலாம்ஷோ பாவில் படுத்தபடி -பாக்கலாந்தான்
இம்மாம் பெரிய உலகத்தைக் கண்முன்னே
தம்மாத்துண் டேகணினி யில்!
திங்கள், 28 ஜூலை, 2008
செவ்வாய், 15 ஜூலை, 2008
நட்பு!
காசுள்ள மட்டும்தான் காசினியில் சொந்தமடா!
பூசிக்கும் மட்டும் இறைபந்தம்! -யோசிக்கின்
நம்வீட்டு நாய்கூட வாலாட்டும் ரொட்டிக்கே!
நம்பக் கழுத்தறுக்கும் நட்பு!
ஈறிற்றால் பல்லுறவு நீங்கிவிடும்! ஏரிகளில்
நீரற்றால் நீங்கிவிடும் நீர்ப்பறவை! -பாரினில்
தோணிகரை தொட்டால் துடுப்புறவு நீங்கிவிடும்!
நாணயம் இல்லையெனில் நட்பு!
அகரம்.அமுதா
பூசிக்கும் மட்டும் இறைபந்தம்! -யோசிக்கின்
நம்வீட்டு நாய்கூட வாலாட்டும் ரொட்டிக்கே!
நம்பக் கழுத்தறுக்கும் நட்பு!
ஈறிற்றால் பல்லுறவு நீங்கிவிடும்! ஏரிகளில்
நீரற்றால் நீங்கிவிடும் நீர்ப்பறவை! -பாரினில்
தோணிகரை தொட்டால் துடுப்புறவு நீங்கிவிடும்!
நாணயம் இல்லையெனில் நட்பு!
அகரம்.அமுதா
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)