-

பார்க்கலாம் நின்றபடி பார்க்கலாம்உட் கார்ந்தபடி பார்க்கலாம்ஷோ பாவில் படுத்தபடி -பாக்கலாந்தான் இம்மாம் பெரிய உலகத்தைக் கண்முன்னே தம்மாத்துண் டேகணினி யில்!

சனி, 14 ஜனவரி, 2012

எழுச்சி வணக்க மாலையும் கரிகாலன் ஈற்றெடுப்பு நூல் வெளியீடும்!


மூத்த தளபதி கேணல் கிட்டு உட்பட இம்மாததில் வீரகாவியமான மாவீரர்களது நினைவுவணக்க மாலையும், "கரிகாலன் ஈற்றெடுப்பு" நூல் வெளியீடும்.

மூத்த தளபதியும் வரலாற்று நாயகனுமான கேணல் கிட்டு உட்பட இம்மாததில் வீரகாவியமான அனைத்து மாவீரர்களையும் நினைவுகொள்ளும் நினைவுவணக்க மாலை லண்டனில் நடைபெறவுள்ளது.

22.01.2012 ஞாயிர்றுக்கிழமை மாலை 5:30 மணி முதல் மாலை 9:30 மணிவரை Eastham, Barking, London, E6 2RP எனும் முகவரியில் அமைந்துள்ள Eastham TOWN HALL மண்டபத்தில் நடைபெறவுள்ள  இந்த நிகழ்வில் "கரிகாலன் ஈற்றெடுப்பு" எனும் தேசியத் தலைவர் தொடர்பான கவிதை நூலும், மேலும் மூன்று ஒலிப் பேழைகளும் வெளியிட்டு வைக்கப்படவுள்ளது. 

இந்த நிகழ்வில் பிரித்தானியா வாழ் தமிழ்மக்களை கலந்துகொண்டு மண்னுள்ளும், எம் மனங்களினுள்ளும் வித்தாகி வாழும் மாவீரர்களுக்கு தமது மலர் வணக்கதினை செலுத்துமாறு  கேட்டுக்கொள்கின்றோம்.

இம் மாதத்தில் வீரச்சாவைத் தழுவிய மாவீரர்களது உறவினர்கள், மற்றும் உரித்துடையோர் ஐக்கிய இராட்சியத்தில் வசிப்பவர்களாக இருந்தால் 0208 733 8203 எனும் தொலைபேசி இலக்கத்தினூடாகவோ அல்லது info@tnrf.co.uk எனும் மின்னஞ்சலூடாகவோ தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.



புதன், 7 டிசம்பர், 2011

நூல் அறிமுகம்

நூல் அறிமுகம்!

திங்கள், 14 மார்ச், 2011

நூல் அறிமுகம்!






அமுதன் குறள் நூல் வெளியிடப்பட்டுள்ளது. விலை 50 ரூபாய். வாங்க விரும்புவோர் அனுகவேண்டிய முகவரி

அகரம் அமுதன்
அகரம் சீகூர் (அஞ்சல்)
குன்னம் (வட்டம்)
பெரம்பலூர் -621 108

பேச 9940723625

திங்கள், 31 மே, 2010

கடிகாரம்!


சிரமில்லை சின்ன செவியுண்டு; கேளாய்!
கரமில்லை காட்டிக் கொடுக்க –விரல்களுண்டு;
கண்ணில்லை காண்பதற்கே கண்ணாடி போட்டிருக்கும்
என்னருமை கைக்கடிகா ரம்!

வெள்ளி, 21 மே, 2010

மாங்கனி!


மாசிலா மாமுடிக்கு மாமுனிவன் ஈந்ததை
மாசிரத்தான் பெற்றான் மதிபெற்று –மாசென்றே
மாசிகரம் போனான் மயிலவன் இத்தனைக்கும்
மாங்கனியே காரண மாம்!

ஞாயிறு, 7 பிப்ரவரி, 2010

தீண்டாமை!

தீண்டுமைதீண் டாமை இலாநாட்டில் வாழ்வார்க்கு
யாண்டும் இழிதல் இல!

அகரம் அமுதா

புதன், 24 ஜூன், 2009

!

ஆற்றோரம் நாணல் அடியில் அமர்ந்தொருவன்
நேற்றுண்ட தைப்போக்கி நீங்கிச்சென் -றூற்றூறும்
நீரினிலே காலலம்பி நீங்கினான் நேரிழையும்
நீரிறைத்து நீங்கினால் நின்று.

அகரம் அமுதா

வியாழன், 18 ஜூன், 2009

புகை!

நகரம் முதல நரகம் உறிஞ்சும்
புகையின் முதலேவாய்ப் புற்று.

புற்றதனால் வீழும் புகழுடல் பற்றறுத்து
முற்றா எழாஅர் எனில்.

புற்றதால் வாயில் புழுநெலியும் பற்றதனால்
வைக்காதே பாழ்சுருளின் மேல்.

அகரம் அமுதா

செவ்வாய், 17 பிப்ரவரி, 2009

ஏமாற்றம்!

வித்தெல்லாம் வித்தும்ஏ சண்டுக்குப் பத்தாம
மத்ததுக்குக் காட்டைவீட்டை வச்சுவந்தேன் -அத்தமகள்
கைநழுவிப் போனதுபோல் காசுக்காய் வேர்வைசிந்தி
மெய்யிளைச்சிப் போனதேமிச் சம்!


அகரம்.அமுதா

திங்கள், 9 பிப்ரவரி, 2009

மூட நம்பிக்கை!


ராந்தல் அனைச்சிநேத்தி ராவில் உறங்கயில
ஆந்தை அலறி அடங்கியதில் -சாந்திபோய்
நொந்திடுச்சே நோகாத நெஞ்சமி(து) அந்தியில
தந்திவந்து சேர்ந்திடுச்சே தான்!


அகரம்.அமுதா

செவ்வாய், 30 டிசம்பர், 2008

தெருக்குறள்! கல்விவிலை பேசல்!

கற்க கசடறக் கற்பவைக் கற்றபின்
விற்க அதற்குத் தக!

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டை
பண்ணென்ப விற்றுப் பணம்!

கண்ணுடையர் கற்றகல்வி விற்றோர் முகத்திரண்டுப்
புண்ணுடையர் விற்கா தவர்!

உவப்ப விலைபேசி உள்ளது கொள்ளல்
அனைத்தேயாம் கல்வித் தொழில்!

உடையார் இலாரைஏ மாற்றல்போல் விற்பார்
கடையரே விற்கா தவர்!

தொட்டனைத் தூறுமணற் கேணிகல்வி விற்பார்க்கு
விற்றனைத் தூறும் பொருள்!

ஓதுவித்தல் மாடாமால் காசாமால் என்னொருவன்
சாந்துணையும் விற்காத வாறு!

ஒருமைக்கண் கல்விவிற்ற கா(சு)அவர் தன்கால்
வழிக்கெலாம் ஏமாப் புடைத்து!

தாமின் புறுவ(து) உலகின் புறவிற்றுக்
காமுறுவர் விற்றறிந் தார்!

கேடெனினும் கல்வி விலைசெய்க; செய்யார்க்கு
மாடுண்டோ மற்றை வழி?

தெருவள்ளுவன் (அகரம்.அமுதா)

ஞாயிறு, 21 டிசம்பர், 2008

கணவனும், மனைவியும்!

கணவன்:-
காலை தொடங்கிக் கடுமையா வேர்வைசிந்தி
மாலையான பின்னே மதிமயங்க –வேலைவிட்டுப்
பொண்டாட் டியொனக்குப் பூவாங்கி வந்தாக்கா
என்னாடி போய்ஒதுங்கு றே?

மனைவி:-
நேத்தி இராவுல நித்திரைநான் கொள்ளயில
ஆத்தாசொன் னான்னு அடிச்சிப்புட்(டு) -ஆத்திரம்
தீர்ந்ததும் இன்னிக்குத் தேடிவந்துக் கொஞ்சினாலும்
நேர்ந்ததை நான்மறப்பே னா?

அகரம்.அமுதா

சனி, 6 டிசம்பர், 2008

கணவனும், மனைவியும்!

கணவன்:-
காதோடக் கம்மல் கழட்டிப்போய் விற்றபணம்
சூதாட்டத் தில்வெச்சி தோற்றுவிட்டேன் -தோதாக
கட்டிய தாலி கழட்டிநீ தந்தாக்கா
விட்டதை மீட்டிடு வேன்!

மனைவி:-
வேலைக்குப் போகாமல் வெத்துவேட்டாய்ச் சுற்றிவந்து
தாலிக் கொடியையா 'தா'ங்கற? -மாலையானால்
வீட்டுப் பொருளையெல்லாம் விற்றுக் குடித்துவிட்டு
சீட்டாடப் போறியா? சீ!

அகரம்.அமுதா

ஞாயிறு, 12 அக்டோபர், 2008

செவுல்பிஞ்சிடும்!

எண்ணனுக்கும் எக்காக்கும் என்றனுக்குங் கண்ணாளம்
பண்ணலேன்னு சொன்னாப் பரிகசிச்சி -முன்னஎங்க
ஆத்தாக்கும் அப்பனுக்கும் ஆச்சான்றே? ஓங்கியொன்னு
போட்டா செவுல்பிஞ்சி டும்!

அகரம்.அமுதா

செவ்வாய், 7 அக்டோபர், 2008

தெருவில் ஒருவன்!

தெருவில் ஒருவன்:-

பந்தாவாப் பையில பத்துரூபா வச்சபடி
வந்தாலும் வந்தேன் வழிமறிச்சிக் -கொண்டாந்தப்
பத்தில் சிகரெட்டும் பான்பராக்கும் வாங்குன்னு
நிக்கிறான்என் னோட ஃபிரண்டு!

அகரம்.அமுதா

வெள்ளி, 3 அக்டோபர், 2008

சிலை!

(தமிழக அரசு நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு உருவசிலை அமைத்தபோது!)

ஒத்தையடிப் பாதை ஒதுக்குப் புறம்ஓடை
நித்தமும் ஒன்றைநாடி நான்ஒதுங்க -மத்தபடி
காக்கை கழிக்கக் கழிப்பறைகள் கட்டிவிட்டுப்
பார்க்கிற தேஅரசு பார்!

அகரம்.அமுதா

சனி, 27 செப்டம்பர், 2008

நாகரிக நங்கை!

குட்டைப்பா வாடை கொழுத்த தொடைகாட்ட
வட்டணிந்த மார்பின் வளங்காட்டி -வட்டுடைகீழ்
ஆதார மில்லா அரும்பாகம் காட்டுமவள்
சேதார மில்லாச் சிலை!

குதிகால் அணியால் கொடியிடை ஆடும்
இதழோடு லிப்ஸ்டிக் எழிலாம் -சுதிசேர்
நடையில் நளின நயமிருக்கும் இல்லா
இடைபோல் அணிவாள் உடை!

பாவாடை தாவணிகள் பார்ப்ப(து) அரிதாச்சு;
பூவாட்டம் சேலைகளும் போயாச்சு -பாவையர்க்கு
சல்வார்க் கமீஸ்;சுடி தார்;மிடி ஜீன்ஸ்;மினிஸ்கர்ட்(டு)
எல்லாந்தான் இன்றைய டேஸ்ட்!

அகரம்.அமுதா

திங்கள், 22 செப்டம்பர், 2008

?

குறுக்கி எழுதக் குறளிருக்க வீணாய்
கிறுக்குவதும் ஏனாம்ஹைக் கூ?

அகரம்.அமுதா!

வியாழன், 18 செப்டம்பர், 2008

உழவு!

வீசமஞ்சு நாத்துநட்டு வேண்டாக் களையெடுத்துக்
காசை உரமாக் கழனியிட்டுப் -பாசனநீர்
தேக்கி விளைந்ததைச் சேர்த்தடிச்சுப் பாத்தாக்கா
சாக்கில் பதரேமிச் சம்!

அகரம்.அமுதா