-

பார்க்கலாம் நின்றபடி பார்க்கலாம்உட் கார்ந்தபடி பார்க்கலாம்ஷோ பாவில் படுத்தபடி -பாக்கலாந்தான் இம்மாம் பெரிய உலகத்தைக் கண்முன்னே தம்மாத்துண் டேகணினி யில்!

புதன், 7 டிசம்பர், 2011

நூல் அறிமுகம்

நூல் அறிமுகம்!

திங்கள், 14 மார்ச், 2011

நூல் அறிமுகம்!






அமுதன் குறள் நூல் வெளியிடப்பட்டுள்ளது. விலை 50 ரூபாய். வாங்க விரும்புவோர் அனுகவேண்டிய முகவரி

அகரம் அமுதன்
அகரம் சீகூர் (அஞ்சல்)
குன்னம் (வட்டம்)
பெரம்பலூர் -621 108

பேச 9940723625

திங்கள், 31 மே, 2010

கடிகாரம்!


சிரமில்லை சின்ன செவியுண்டு; கேளாய்!
கரமில்லை காட்டிக் கொடுக்க –விரல்களுண்டு;
கண்ணில்லை காண்பதற்கே கண்ணாடி போட்டிருக்கும்
என்னருமை கைக்கடிகா ரம்!

வெள்ளி, 21 மே, 2010

மாங்கனி!


மாசிலா மாமுடிக்கு மாமுனிவன் ஈந்ததை
மாசிரத்தான் பெற்றான் மதிபெற்று –மாசென்றே
மாசிகரம் போனான் மயிலவன் இத்தனைக்கும்
மாங்கனியே காரண மாம்!

ஞாயிறு, 7 பிப்ரவரி, 2010

தீண்டாமை!

தீண்டுமைதீண் டாமை இலாநாட்டில் வாழ்வார்க்கு
யாண்டும் இழிதல் இல!

அகரம் அமுதா

புதன், 24 ஜூன், 2009

!

ஆற்றோரம் நாணல் அடியில் அமர்ந்தொருவன்
நேற்றுண்ட தைப்போக்கி நீங்கிச்சென் -றூற்றூறும்
நீரினிலே காலலம்பி நீங்கினான் நேரிழையும்
நீரிறைத்து நீங்கினால் நின்று.

அகரம் அமுதா

வியாழன், 18 ஜூன், 2009

புகை!

நகரம் முதல நரகம் உறிஞ்சும்
புகையின் முதலேவாய்ப் புற்று.

புற்றதனால் வீழும் புகழுடல் பற்றறுத்து
முற்றா எழாஅர் எனில்.

புற்றதால் வாயில் புழுநெலியும் பற்றதனால்
வைக்காதே பாழ்சுருளின் மேல்.

அகரம் அமுதா

செவ்வாய், 17 பிப்ரவரி, 2009

ஏமாற்றம்!

வித்தெல்லாம் வித்தும்ஏ சண்டுக்குப் பத்தாம
மத்ததுக்குக் காட்டைவீட்டை வச்சுவந்தேன் -அத்தமகள்
கைநழுவிப் போனதுபோல் காசுக்காய் வேர்வைசிந்தி
மெய்யிளைச்சிப் போனதேமிச் சம்!


அகரம்.அமுதா

திங்கள், 9 பிப்ரவரி, 2009

மூட நம்பிக்கை!


ராந்தல் அனைச்சிநேத்தி ராவில் உறங்கயில
ஆந்தை அலறி அடங்கியதில் -சாந்திபோய்
நொந்திடுச்சே நோகாத நெஞ்சமி(து) அந்தியில
தந்திவந்து சேர்ந்திடுச்சே தான்!


அகரம்.அமுதா