-
பார்க்கலாம் நின்றபடி பார்க்கலாம்உட் கார்ந்தபடி
பார்க்கலாம்ஷோ பாவில் படுத்தபடி -பாக்கலாந்தான்
இம்மாம் பெரிய உலகத்தைக் கண்முன்னே
தம்மாத்துண் டேகணினி யில்!
திங்கள், 14 மார்ச், 2011
நூல் அறிமுகம்!
அமுதன் குறள் நூல் வெளியிடப்பட்டுள்ளது. விலை 50 ரூபாய். வாங்க விரும்புவோர் அனுகவேண்டிய முகவரி
அகரம் அமுதன்
அகரம் சீகூர் (அஞ்சல்)
குன்னம் (வட்டம்)
பெரம்பலூர் -621 108
பேச 9940723625
லேபிள்கள்:
நூல் அறிமுகம்
திங்கள், 31 மே, 2010
கடிகாரம்!
வெள்ளி, 21 மே, 2010
மாங்கனி!
ஞாயிறு, 7 பிப்ரவரி, 2010
புதன், 24 ஜூன், 2009
!
ஆற்றோரம் நாணல் அடியில் அமர்ந்தொருவன்
நேற்றுண்ட தைப்போக்கி நீங்கிச்சென் -றூற்றூறும்
நீரினிலே காலலம்பி நீங்கினான் நேரிழையும்
நீரிறைத்து நீங்கினால் நின்று.
நேற்றுண்ட தைப்போக்கி நீங்கிச்சென் -றூற்றூறும்
நீரினிலே காலலம்பி நீங்கினான் நேரிழையும்
நீரிறைத்து நீங்கினால் நின்று.
அகரம் அமுதா
வியாழன், 18 ஜூன், 2009
புகை!
நகரம் முதல நரகம் உறிஞ்சும்
புகையின் முதலேவாய்ப் புற்று.
அகரம் அமுதா
புகையின் முதலேவாய்ப் புற்று.
புற்றதனால் வீழும் புகழுடல் பற்றறுத்து
முற்றா எழாஅர் எனில்.
புற்றதால் வாயில் புழுநெலியும் பற்றதனால்
வைக்காதே பாழ்சுருளின் மேல்.
முற்றா எழாஅர் எனில்.
புற்றதால் வாயில் புழுநெலியும் பற்றதனால்
வைக்காதே பாழ்சுருளின் மேல்.
அகரம் அமுதா
செவ்வாய், 17 பிப்ரவரி, 2009
ஏமாற்றம்!
வித்தெல்லாம் வித்தும்ஏ சண்டுக்குப் பத்தாம
மத்ததுக்குக் காட்டைவீட்டை வச்சுவந்தேன் -அத்தமகள்
கைநழுவிப் போனதுபோல் காசுக்காய் வேர்வைசிந்தி
மெய்யிளைச்சிப் போனதேமிச் சம்!
அகரம்.அமுதா
மத்ததுக்குக் காட்டைவீட்டை வச்சுவந்தேன் -அத்தமகள்
கைநழுவிப் போனதுபோல் காசுக்காய் வேர்வைசிந்தி
மெய்யிளைச்சிப் போனதேமிச் சம்!
அகரம்.அமுதா
திங்கள், 9 பிப்ரவரி, 2009
மூட நம்பிக்கை!
ராந்தல் அனைச்சிநேத்தி ராவில் உறங்கயில
ஆந்தை அலறி அடங்கியதில் -சாந்திபோய்
நொந்திடுச்சே நோகாத நெஞ்சமி(து) அந்தியில
தந்திவந்து சேர்ந்திடுச்சே தான்!
அகரம்.அமுதா
செவ்வாய், 30 டிசம்பர், 2008
தெருக்குறள்! கல்விவிலை பேசல்!
கற்க கசடறக் கற்பவைக் கற்றபின்
விற்க அதற்குத் தக!
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டை
பண்ணென்ப விற்றுப் பணம்!
கண்ணுடையர் கற்றகல்வி விற்றோர் முகத்திரண்டுப்
புண்ணுடையர் விற்கா தவர்!
உவப்ப விலைபேசி உள்ளது கொள்ளல்
அனைத்தேயாம் கல்வித் தொழில்!
உடையார் இலாரைஏ மாற்றல்போல் விற்பார்
கடையரே விற்கா தவர்!
தொட்டனைத் தூறுமணற் கேணிகல்வி விற்பார்க்கு
விற்றனைத் தூறும் பொருள்!
ஓதுவித்தல் மாடாமால் காசாமால் என்னொருவன்
சாந்துணையும் விற்காத வாறு!
ஒருமைக்கண் கல்விவிற்ற கா(சு)அவர் தன்கால்
வழிக்கெலாம் ஏமாப் புடைத்து!
தாமின் புறுவ(து) உலகின் புறவிற்றுக்
காமுறுவர் விற்றறிந் தார்!
கேடெனினும் கல்வி விலைசெய்க; செய்யார்க்கு
மாடுண்டோ மற்றை வழி?
தெருவள்ளுவன் (அகரம்.அமுதா)
விற்க அதற்குத் தக!
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டை
பண்ணென்ப விற்றுப் பணம்!
கண்ணுடையர் கற்றகல்வி விற்றோர் முகத்திரண்டுப்
புண்ணுடையர் விற்கா தவர்!
உவப்ப விலைபேசி உள்ளது கொள்ளல்
அனைத்தேயாம் கல்வித் தொழில்!
உடையார் இலாரைஏ மாற்றல்போல் விற்பார்
கடையரே விற்கா தவர்!
தொட்டனைத் தூறுமணற் கேணிகல்வி விற்பார்க்கு
விற்றனைத் தூறும் பொருள்!
ஓதுவித்தல் மாடாமால் காசாமால் என்னொருவன்
சாந்துணையும் விற்காத வாறு!
ஒருமைக்கண் கல்விவிற்ற கா(சு)அவர் தன்கால்
வழிக்கெலாம் ஏமாப் புடைத்து!
தாமின் புறுவ(து) உலகின் புறவிற்றுக்
காமுறுவர் விற்றறிந் தார்!
கேடெனினும் கல்வி விலைசெய்க; செய்யார்க்கு
மாடுண்டோ மற்றை வழி?
தெருவள்ளுவன் (அகரம்.அமுதா)
ஞாயிறு, 21 டிசம்பர், 2008
கணவனும், மனைவியும்!
கணவன்:-
காலை தொடங்கிக் கடுமையா வேர்வைசிந்தி
மாலையான பின்னே மதிமயங்க –வேலைவிட்டுப்
பொண்டாட் டியொனக்குப் பூவாங்கி வந்தாக்கா
என்னாடி போய்ஒதுங்கு றே?
மனைவி:-
நேத்தி இராவுல நித்திரைநான் கொள்ளயில
ஆத்தாசொன் னான்னு அடிச்சிப்புட்(டு) -ஆத்திரம்
தீர்ந்ததும் இன்னிக்குத் தேடிவந்துக் கொஞ்சினாலும்
நேர்ந்ததை நான்மறப்பே னா?
அகரம்.அமுதா
காலை தொடங்கிக் கடுமையா வேர்வைசிந்தி
மாலையான பின்னே மதிமயங்க –வேலைவிட்டுப்
பொண்டாட் டியொனக்குப் பூவாங்கி வந்தாக்கா
என்னாடி போய்ஒதுங்கு றே?
மனைவி:-
நேத்தி இராவுல நித்திரைநான் கொள்ளயில
ஆத்தாசொன் னான்னு அடிச்சிப்புட்(டு) -ஆத்திரம்
தீர்ந்ததும் இன்னிக்குத் தேடிவந்துக் கொஞ்சினாலும்
நேர்ந்ததை நான்மறப்பே னா?
அகரம்.அமுதா
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)


.jpg)