ஆற்றோரம் நாணல் அடியில் அமர்ந்தொருவன்
நேற்றுண்ட தைப்போக்கி நீங்கிச்சென் -றூற்றூறும்
நீரினிலே காலலம்பி நீங்கினான் நேரிழையும்
நீரிறைத்து நீங்கினால் நின்று.
அகரம் அமுதா
நகரம் முதல நரகம் உறிஞ்சும்
புகையின் முதலேவாய்ப் புற்று.
புற்றதனால் வீழும் புகழுடல் பற்றறுத்து
முற்றா எழாஅர் எனில்.
புற்றதால் வாயில் புழுநெலியும் பற்றதனால்
வைக்காதே பாழ்சுருளின் மேல்.
அகரம் அமுதா
வித்தெல்லாம் வித்தும்ஏ சண்டுக்குப் பத்தாம
மத்ததுக்குக் காட்டைவீட்டை வச்சுவந்தேன் -அத்தமகள்
கைநழுவிப் போனதுபோல் காசுக்காய் வேர்வைசிந்தி
மெய்யிளைச்சிப் போனதேமிச் சம்!
அகரம்.அமுதா
ராந்தல் அனைச்சிநேத்தி ராவில் உறங்கயில
ஆந்தை அலறி அடங்கியதில் -சாந்திபோய்
நொந்திடுச்சே நோகாத நெஞ்சமி(து) அந்தியில
தந்திவந்து சேர்ந்திடுச்சே தான்!
அகரம்.அமுதா