-

பார்க்கலாம் நின்றபடி பார்க்கலாம்உட் கார்ந்தபடி பார்க்கலாம்ஷோ பாவில் படுத்தபடி -பாக்கலாந்தான் இம்மாம் பெரிய உலகத்தைக் கண்முன்னே தம்மாத்துண் டேகணினி யில்!

சனி, 14 ஜனவரி, 2012

எழுச்சி வணக்க மாலையும் கரிகாலன் ஈற்றெடுப்பு நூல் வெளியீடும்!


மூத்த தளபதி கேணல் கிட்டு உட்பட இம்மாததில் வீரகாவியமான மாவீரர்களது நினைவுவணக்க மாலையும், "கரிகாலன் ஈற்றெடுப்பு" நூல் வெளியீடும்.

மூத்த தளபதியும் வரலாற்று நாயகனுமான கேணல் கிட்டு உட்பட இம்மாததில் வீரகாவியமான அனைத்து மாவீரர்களையும் நினைவுகொள்ளும் நினைவுவணக்க மாலை லண்டனில் நடைபெறவுள்ளது.

22.01.2012 ஞாயிர்றுக்கிழமை மாலை 5:30 மணி முதல் மாலை 9:30 மணிவரை Eastham, Barking, London, E6 2RP எனும் முகவரியில் அமைந்துள்ள Eastham TOWN HALL மண்டபத்தில் நடைபெறவுள்ள  இந்த நிகழ்வில் "கரிகாலன் ஈற்றெடுப்பு" எனும் தேசியத் தலைவர் தொடர்பான கவிதை நூலும், மேலும் மூன்று ஒலிப் பேழைகளும் வெளியிட்டு வைக்கப்படவுள்ளது. 

இந்த நிகழ்வில் பிரித்தானியா வாழ் தமிழ்மக்களை கலந்துகொண்டு மண்னுள்ளும், எம் மனங்களினுள்ளும் வித்தாகி வாழும் மாவீரர்களுக்கு தமது மலர் வணக்கதினை செலுத்துமாறு  கேட்டுக்கொள்கின்றோம்.

இம் மாதத்தில் வீரச்சாவைத் தழுவிய மாவீரர்களது உறவினர்கள், மற்றும் உரித்துடையோர் ஐக்கிய இராட்சியத்தில் வசிப்பவர்களாக இருந்தால் 0208 733 8203 எனும் தொலைபேசி இலக்கத்தினூடாகவோ அல்லது info@tnrf.co.uk எனும் மின்னஞ்சலூடாகவோ தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.



புதன், 7 டிசம்பர், 2011

நூல் அறிமுகம்

நூல் அறிமுகம்!

திங்கள், 14 மார்ச், 2011

நூல் அறிமுகம்!






அமுதன் குறள் நூல் வெளியிடப்பட்டுள்ளது. விலை 50 ரூபாய். வாங்க விரும்புவோர் அனுகவேண்டிய முகவரி

அகரம் அமுதன்
அகரம் சீகூர் (அஞ்சல்)
குன்னம் (வட்டம்)
பெரம்பலூர் -621 108

பேச 9940723625

திங்கள், 31 மே, 2010

கடிகாரம்!


சிரமில்லை சின்ன செவியுண்டு; கேளாய்!
கரமில்லை காட்டிக் கொடுக்க –விரல்களுண்டு;
கண்ணில்லை காண்பதற்கே கண்ணாடி போட்டிருக்கும்
என்னருமை கைக்கடிகா ரம்!

வெள்ளி, 21 மே, 2010

மாங்கனி!


மாசிலா மாமுடிக்கு மாமுனிவன் ஈந்ததை
மாசிரத்தான் பெற்றான் மதிபெற்று –மாசென்றே
மாசிகரம் போனான் மயிலவன் இத்தனைக்கும்
மாங்கனியே காரண மாம்!

ஞாயிறு, 7 பிப்ரவரி, 2010

தீண்டாமை!

தீண்டுமைதீண் டாமை இலாநாட்டில் வாழ்வார்க்கு
யாண்டும் இழிதல் இல!

அகரம் அமுதா

புதன், 24 ஜூன், 2009

!

ஆற்றோரம் நாணல் அடியில் அமர்ந்தொருவன்
நேற்றுண்ட தைப்போக்கி நீங்கிச்சென் -றூற்றூறும்
நீரினிலே காலலம்பி நீங்கினான் நேரிழையும்
நீரிறைத்து நீங்கினால் நின்று.

அகரம் அமுதா

வியாழன், 18 ஜூன், 2009

புகை!

நகரம் முதல நரகம் உறிஞ்சும்
புகையின் முதலேவாய்ப் புற்று.

புற்றதனால் வீழும் புகழுடல் பற்றறுத்து
முற்றா எழாஅர் எனில்.

புற்றதால் வாயில் புழுநெலியும் பற்றதனால்
வைக்காதே பாழ்சுருளின் மேல்.

அகரம் அமுதா

செவ்வாய், 17 பிப்ரவரி, 2009

ஏமாற்றம்!

வித்தெல்லாம் வித்தும்ஏ சண்டுக்குப் பத்தாம
மத்ததுக்குக் காட்டைவீட்டை வச்சுவந்தேன் -அத்தமகள்
கைநழுவிப் போனதுபோல் காசுக்காய் வேர்வைசிந்தி
மெய்யிளைச்சிப் போனதேமிச் சம்!


அகரம்.அமுதா