-

பார்க்கலாம் நின்றபடி பார்க்கலாம்உட் கார்ந்தபடி பார்க்கலாம்ஷோ பாவில் படுத்தபடி -பாக்கலாந்தான் இம்மாம் பெரிய உலகத்தைக் கண்முன்னே தம்மாத்துண் டேகணினி யில்!

ஞாயிறு, 21 டிசம்பர், 2008

கணவனும், மனைவியும்!

கணவன்:-
காலை தொடங்கிக் கடுமையா வேர்வைசிந்தி
மாலையான பின்னே மதிமயங்க –வேலைவிட்டுப்
பொண்டாட் டியொனக்குப் பூவாங்கி வந்தாக்கா
என்னாடி போய்ஒதுங்கு றே?

மனைவி:-
நேத்தி இராவுல நித்திரைநான் கொள்ளயில
ஆத்தாசொன் னான்னு அடிச்சிப்புட்(டு) -ஆத்திரம்
தீர்ந்ததும் இன்னிக்குத் தேடிவந்துக் கொஞ்சினாலும்
நேர்ந்ததை நான்மறப்பே னா?

அகரம்.அமுதா

கருத்துகள் இல்லை: