-

பார்க்கலாம் நின்றபடி பார்க்கலாம்உட் கார்ந்தபடி பார்க்கலாம்ஷோ பாவில் படுத்தபடி -பாக்கலாந்தான் இம்மாம் பெரிய உலகத்தைக் கண்முன்னே தம்மாத்துண் டேகணினி யில்!

சனி, 6 டிசம்பர், 2008

கணவனும், மனைவியும்!

கணவன்:-
காதோடக் கம்மல் கழட்டிப்போய் விற்றபணம்
சூதாட்டத் தில்வெச்சி தோற்றுவிட்டேன் -தோதாக
கட்டிய தாலி கழட்டிநீ தந்தாக்கா
விட்டதை மீட்டிடு வேன்!

மனைவி:-
வேலைக்குப் போகாமல் வெத்துவேட்டாய்ச் சுற்றிவந்து
தாலிக் கொடியையா 'தா'ங்கற? -மாலையானால்
வீட்டுப் பொருளையெல்லாம் விற்றுக் குடித்துவிட்டு
சீட்டாடப் போறியா? சீ!

அகரம்.அமுதா

1 கருத்து:

Unknown சொன்னது…

ram j

குடி குடியைக் கெடுக்கும்

புலவர் இராமாநுசம்